தொழிலாளி, முதலாளி, டாக்டர், என்ஜினீயர், என ரஜினி ரசிகர்களுக்குள் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ஆனால் ராமநாதபுர மாவாட்ட ரஜினி மன்றத்தின் மாவட்ட செயலாளர் திரு.பால நமச்சிவாயம் எடுத்திருக்கும் அவதாரம் என்ன தெரியுமா? சினிமா தயாரிப்பாளர்.
முற்றிலும் புதியவர்களை வைத்து, இவர் எடுக்கும் படத்திற்கு மதுரை வட்டார மொழியில் மிகவும் பாப்புலரான ‘பயபுள்ள’ என்ற வார்த்தையை டைட்டிலாக வைத்திருக்கிறார் பால நமச்சி. தான் படம் தயாரிக்கும் விஷயத்தை சமீபத்தில் சூப்பர் ஸ்டாரிடம் கூறி அவரது ஆசியை பெற்று வந்திருக்கிறார். முற்றிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்று தெரிந்துகொண்ட சூப்பர் ஸ்டார், இவருக்கு வாழ்த்து கடிதமும் தந்திருக்கிறார்.
இந்த விஷயம் நமக்கு தெரியவந்தது, மிகவும் சுவாரஸ்யமான சம்பவமாகும். நமக்கு இது குறித்து முதலில் எதுவும் தெரியாது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வடபழனி சிக்னல் அருகே, காவல் நிலையம் எதிரில் “தினசரி உதிப்பது சூரியன்; திரையுலகை ஜெயிப்பது எந்திரன்” என்ற வாசகத்துடன் இந்த பேனரை முதன் முதலில் பார்த்தேன். பரவாயில்லேப்பா… அவங்க பட பேனர்லே கூட யாரோ நம்மளை வாழ்த்தி வெச்சிருக்காங்க என்று நினைத்துகொண்டேன். தயாரிப்பாளர் பெயரை பார்த்தபோது, எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்.
அடுத்த சில வாரங்களில் தலைவரின் பேடுடன் அதே படத்தின் வேறு புதிய பேனரை பார்க்க நேர்ந்தது. அதன் பிறகு தீவிரமாக விசாரித்தபோது தான் புரிந்தது, தயாரிப்பாளர் வேறு யாருமல்ல. நமது ராமநாதபுர மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் திரு.பால நமச்சியாவம் என்று. இது தொடர்பாக நமக்கு தகவல் அளித்து தொடர்பு ஏற்படுத்தி தந்தவர், நம் தள வாசகர் நாகை மாவட்ட (தெற்கு) தலைவர் திரு.நாகூர் பாரி அவர்கள். அவருக்கு நம் நன்றி.
இதுகுறித்து திரு.பால நமச்சி நம்மிடம் கூறுகையில், “நான் நேசிக்கும் நம் தலைவர் கையில் வாழ்த்து கடிதம் பெற்றது, எனக்கு மிகப் பெரிய பாக்கியம். இந்த கடிதம் என் கைக்கு வந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவரது பரம ரசிகனான நான் ஒரு படத்தை தயாரிக்கும் அளவிற்கு வந்தது அவரால் தான்.” என்றார்.
இந்த படத்தின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா? முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்கள் பணியாற்றும் படம் இது. கதாநாயகன் முதல் கதாநாயகி வரை, டைரக்டர் முதல் ஒளிப்பதிவாளர் வரை அனைவரும் ரஜினி ரசிகர்கள்.
“இது முழுக்க முழுக்க சாத்தியமானது நான் வணங்கும் சித்தர்களின் அருளால் தான்.” என்று கூறும் நமச்சி பதினெண் சித்தர்களின் பரம பக்தர். சித்தர்களுக்கு உருவம் கொடுக்கும் ஒரு உன்னத முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். ஒரு புனிதமான பணியில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டு வருவதால், அசைவ உணவு வகைகளை கடந்த சில ஆண்டுகளாக அறவே இவர் தொடுவதில்லை.
அவரது முயற்சி வெற்றியடைய நமது தளம் சார்பாக வாழ்த்துக்களை கூறி, அதே போல “பயபுள்ள” படமும் “மைனா” போல ஒரு மைல் கல் படமாக அமைய இறைவனை வேண்டிக்கொள்வதாக கூறினோம்.
இந்த பதிவுடன், பேனர் புகைப்படங்களையும், தலைவர் அளித்த கடிதத்தையும், நமச்சி தலைவருடன் பல்வேறு சமயங்களில் எடுத்த புகைப்படத்தையும் இணைத்துள்ளேன்.
Source - onlysuperstar.com
நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!
மறுபடியும் மதுரையா...? என்ன சொல்வதென்று தெரியவில்லை... இருந்தாலும் வாழ்த்துக்கள்...
ReplyDelete